தருமபுரி, ஜூன் 04-
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வரவிருக்கும் தென்மேற்கு பருவமழை காலங்களில் மேற்கொள்ளவேண்டிய முக்கிய நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர், முக்கியமான பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விவரித்தார். குறிப்பாக:
🔹 தாழ்வான பகுதிகள், நிவாரண முகாம்கள் (சமுதாய கூடங்கள், திருமண மண்டபங்கள், பள்ளிகள்), போக்குவரத்து வழித்தடங்கள், நீர்நிலைகள் உள்ளிட்ட தகவல்களை தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
🔹 பொதுமக்களுக்கு வெள்ளக்காலத்தில் தேவையான குடிநீர் விநியோக வாகனங்கள், போர்டபிள் ஜெனரேட்டர்கள், உணவுப்பொருட்கள், கேஸ் அடுப்புகள் உள்ளிட்ட அவசியப் பொருட்கள் முன்னமே தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும்.
🔹 சாலையோர மரங்கள் விழும் அபாயம் ஏற்பட்டால் மீட்பு நடவடிக்கைக்காக JCB, புல்டோசர், மர வெட்டும் இயந்திரங்கள் உள்ளிட்டவை பராமரிக்கப்பட்டு தயார் நிலையில் இருக்க வேண்டும்.
🔹 பொதுநல நடவடிக்கைகளாக, குடியிருப்புப் பகுதிகளில் சாலைகள் சீரமைப்பு, கழிவுநீர்கால்வாய் தூய்மை, கொசு ஒழிப்பு மருந்து, குளோரின் பவுடர் உள்ளிட்ட நோய் தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
🔹 மேலும் அனைத்து குடிநீர் கிணறுகள், மேல் நிலை நீர் தொட்டிகள் சுத்தப்படுத்தப்பட்டு குளோரின் கலக்கப்பட்ட குடிநீர் விநியோகம் உறுதி செய்ய வேண்டும்.
🔹 கால்நடை அல்லது மனித உயிரிழப்புகள் ஏற்படும் போதும், உடனடி நிவாரண உதவி வழங்குவதற்காக பிரேத பரிசோதனை அறிக்கைகள் விரைவாக தயாராக வேண்டும் எனவும் மருத்துவ மற்றும் கால்நடை துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
🔹 அவசர காலங்களுக்கு பயன்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள், அவர்களின் தொடர்பு எண்கள், நடமாடும் மருத்துவக் குழுக்கள் ஆகியவற்றின் பட்டியல் தயார் நிலையில் வைக்க வேண்டும்.
🔹 மழைக்கால சேதங்களை பூரணமாக கண்காணிக்க, மாவட்ட கட்டுப்பாட்டு மையம் செயல்படுத்தப்படுவதுடன், பொதுமக்கள் தகவல்களை இலவச எண் 1077-ல் தெரிவிக்கலாம் என கூறப்பட்டது.
இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செல்வி கே. சரண்யா, இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆர். கவிதா, வருவாய் கோட்டாட்சியர்கள் திருமதி காயத்ரி, திரு. சின்னுசாமி, மற்றும் பிற துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
மாவட்ட நிர்வாகம் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும், பொதுமக்களின் பாதுகாப்பு முதல் முன்னுரிமையாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக