தருமபுரி, ஜூன் 13:
தமிழ்நாடு இருப்புக் கிடங்கு விதிகள், 2011-ன் படி, தற்போது வரை மெய்யிலச்சினை சுழற்சி அடிப்படையில் வழங்கப்பட்ட அனுமதிச்சீட்டுகள் செல்லுபடியாகாது. இனி ஜல்லி, கற்கள் மற்றும் எம்.சாண்ட் உள்ளிட்ட கனிமங்களை எடுத்து செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் https://mimas.tn.gov.in இணையதளத்தின் மூலம் மட்டுமே e-permit பெற வேண்டும்.
கனிம விற்பனையில் வரிக்கட்டண கட்டுப்பாடுகளை வலுவாக்கும் நோக்கில், கடந்த ஜூன் 2024 முதல் bulk permit வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் ஏப்ரல் 2025 முதல் e-permit முறை தமிழகம் முழுவதும் நடைமுறையில் உள்ளது. தற்போது, இந்த மின்னணு அனுமதிச்சீட்டு முறையே முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
புதிய கிரஷர் மற்றும் கனிம சேமிப்பு கிடங்குகளின் உரிமையாளர்கள் இணையதளத்தில் தங்களை பதிவு செய்து மட்டுமே அனுமதிப்பத்திரம் பெற முடியும். மின்னணு அனுமதியின்றி கனிமங்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள் பிடிவசமாக்கப்பட்டு, உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த முறை வெளிப்படைத்தன்மையையும், செயல் விரைவையும் அதிகரிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு ஆன்லைன் அனுமதி பெறும் செயல்முறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக