தருமபுரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் கணவாய் பகுதியில் நடைபெறும் சாலைப்பணிகள் – மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 13 ஜூன், 2025

தருமபுரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் கணவாய் பகுதியில் நடைபெறும் சாலைப்பணிகள் – மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.


தருமபுரி, ஜூன் 13:

தருமபுரி மாவட்டம், சேலம்–திருப்பத்தூர்–வாணியம்பாடி சாலை (தே.நெ.179A) H. புதுப்பட்டி கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியையும், மஞ்சவாடி கணவாய் பகுதியில் நடைபெற்று வரும் சாலை அகலப்படுத்தும் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (13.06.2025) நேரில் சென்று ஆய்வு செய்தார்.

சேலம்–திருப்பத்தூர்–வாணியம்பாடி சாலையில் ஏ.பள்ளிப்பட்டி முதல் ஊத்தங்கரை வரை 44.00 கி.மீ. நீளத்திற்கு ரூ.320.00 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி நிறைவடைந்து, அதற்கான சுங்கச்சாவடி H. புதுப்பட்டி கிராமத்தில் நிறுவப்பட்டுள்ளதைக் கவனித்த ஆட்சியர், அந்த இடத்தில் பார்வையிட்டு சுங்கச்சாவடியின் செயல்பாடுகளை பரிசீலித்தார்.


மேலும், மஞ்சவாடி கணவாய் முதல் ஏ.பள்ளிப்பட்டி வரை ரூ.109.00 கோடி மதிப்பீட்டில் 15.60 கி.மீ. நீளத்தில் நான்கு வழிச்சாலையாகவும், 2.20 கி.மீ. நீளத்தில் 10 மீட்டர் அகலமுள்ள சாலையாகவும் அமைக்கும் பணிகள் நடந்து வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


பணிகள் அனைத்தும் தரமாகவும், குறிப்பிட்ட காலத்துக்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட வேண்டுமெனவும், காலதாமதம் ஏதும் ஏற்படாமல் முன்னேற்றப்பட வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இவ்வாய்வின்போது, தேசிய நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் திரு. பெ. நாகராஜி மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad