மாரண்டஅள்ளி, ஜூன் 11-
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சியில் மக்களின் உடல் நலனை பொருட்படுத்தி ஒரு நாள் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாம் பேரூராட்சி தலைவர் எம்.ஏ. வெங்கடேசன் தலைமையில், செயலாளர்கள் மற்றும் கவுன்சிலர்கள் இணைந்து சிறப்பாக நடத்தினர்.
முகாமில் துப்புரவு பணியாளர்கள், பொதுமக்கள் மற்றும் மூத்தவர்கள் கலந்து கொண்டு உடல் பரிசோதனை செய்துக்கொண்டனர். மருத்துவர்கள் பிபி, சர்க்கரை உள்ளிட்ட பரிசோதனைகளை செய்து, உடலில் மற்ற பிரச்சனை இருந்தால் அதற்கான மாத்திரைகளும் கொடுத்தனர், முகாமில் வந்த அனைவருக்கும் நல்ல சிகிச்சை மற்றும் அறிவுரை வழங்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக