அரூர், ஆடவை (ஆனி) 14-
தமிழ்நாட்டின் உரிமைகளை காக்கவும் மாநில சுயாட்சியை உறுதிப்படுத்தவும் திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணையின்படி, "ஓரணியில் தமிழ்நாடு" திட்டத்தின் கீழ் உறுப்பினர் சேர்க்கையை வலுப்படுத்தும் பயிற்சி கூட்டம் அரூர் NN மஹால் திருமண மண்டபத்தில் இன்று (28.06.2025 - ஆனி 14) நடைபெற்றது.
இந்த பயிற்சி கூட்டத்தில், தருமபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் முனைவர் பி. பழனியப்பன் தலைமையில் நடைபெற்றதுடன், தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கு.தமிழழகன் தலைமையில் LED திரையின் மூலம் உறுப்பினர் சேர்க்கை செயலி குறித்த பயிற்சி வழங்கப்பட்டது. BDA, BLA2 ஆகிய குழுவினருக்கு நேரடி பயிற்சி அளிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பி. பழனியப்பன், “அரூர் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் இலக்குடன், ஒவ்வொரு வாக்குசாவடிக்குள்ளும் வீடுவீடாக சென்று திராவிட மாடல் சாதனைகளை எடுத்துரைத்துப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். நிகழ்வில் திமுகவின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், சார்பு அணி பிரதிநிதிகள், IT விங் உறுப்பினர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.