தருமபுரியில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக ஜீப் வாகனம் பொது ஏலத்தில் விற்பனை செய்யப்படுகிறது - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 16 ஜூன், 2025

தருமபுரியில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக ஜீப் வாகனம் பொது ஏலத்தில் விற்பனை செய்யப்படுகிறது


தருமபுரி, ஜூன் 16:

தருமபுரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்குச் சொந்தமான Mahindra Jeep வாகனம் (TN-29G 0242) பயன்பாட்டிற்கேற்பாது கழிவு வாகனமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாகனத்திற்கான மதிப்பீட்டை தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு மேற்கொண்டு, ரூ.13,500/- என நிர்ணயித்துள்ளனர்.

இதையடுத்து, வரும் 20.06.2025 வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்கு, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இந்த வாகனம் பொது ஏலத்தில் விற்கப்படும். ஏலத்தில் கலந்துக்கொள்ள விருப்பமுள்ளவர்கள், நேரில் வருகை தரி விலைப்புள்ளியை கோரலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad