பென்னாகரம், ஜூன் 04-
தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் வாரச் சந்தை, பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கடந்த 3ம் தேதி பெரும் உற்சாகத்துடன் நடந்தது. ஆடுகள் மற்றும் காய்கறிகள் விற்பனைக்காக அதிகாலை 4 மணி முதல் பல்வேறு மலை மற்றும் கிராம பகுதிகளிலிருந்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டனர்.
வரும் ஜூன் 7ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், இன்றைய சந்தையில் அதிகாலை 5 மணிக்கே விற்பனை உச்சத்தை தொட்டது. கர்நாடகா, ஆந்திரா, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் பெரிய எண்ணிக்கையில் ஆடுகளை வாங்க வந்தனர். பண்டிகை தேவை காரணமாக செம்மறி மற்றும் வெள்ளையாடுகள் பலவகைகளில் அதிகளவில் சந்தைக்கு வரப்பட்டது.
40 கிலோ எடை கொண்ட ஆடுகள் ரூ.25,000 முதல் ரூ.40,000 வரை விற்பனையானது. 10 கிலோ எடையுள்ள செம்மறி ஆடுகள் ரூ.10,000 முதல் ரூ.11,000 வரை, வெள்ளையாடுகள் ரூ.8,000 முதல் ரூ.10,000 வரை விற்பனையானது. வியாபாரிகள் மத்தியில் ஆடுகள் வாங்க போட்டி நிலவியது.
வியாபாரிகள் தெரிவித்ததாவது, இன்று நடைபெற்ற சந்தையில் மட்டும் ரூ.2 கோடிக்கு மேல் மதிப்புள்ள ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறினர். மேலும், சில நேர்த்தியான இரட்டை செம்புலி ஆடுகள் கூட ரூ.70,000 வரை விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பக்ரீத் பண்டிகையை ஒட்டி நடைபெற்ற இச்சந்தை, பென்னாகரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மிகப்பெரிய வணிக ஒத்துழைப்பு மற்றும் மக்கள் வருகையை பெற்ற முக்கிய நிகழ்வாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக