காரிமங்கலம், ஆடவை (ஆனி) 12-
இந்த திட்டத்தின் நோக்கம், மாவட்ட நிர்வாகம் மக்களின் வீட்டு வாசலிலேயே சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வு காணும் புதிய வடிவமாகும். இதற்காக ஒவ்வொரு மாதமும் ஒரு நாள், மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை அலுவலர்கள் தங்கியிருந்து அந்த வட்டத்தில் முழுமையான ஆய்வில் ஈடுபட வேண்டும் என்பது தமிழக அரசின் வழிகாட்டுதல்.
இதன் தொடர்ச்சியாக, பெரியாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு மையத்தில், வகுப்பறை, கழிவறை, மாணவர்களின் கற்றல் நிலை, சீருடை, புத்தகம் வழங்கல், குழந்தைகளின் உயரம் மற்றும் எடை கண்காணிப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.
அதனுடன், காரிமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட அடிப்படை வசதிப்பணிகள், திட்டப்பணிகள் மற்றும் பொதுமக்கள் மனுக்களின் நிலை குறித்து நேரில் ஆய்வு செய்து அலுவலர்களிடம் விளக்கமும் பெற்றார். பின்னர், காளப்பனஅள்ளி பகுதியில் அமைக்கப்பட்ட பேவர்பிளாக் சாலையையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
முதற்கட்டமாக கோகுல் திருமண மண்டபத்தில் நடைபெற்ற துறை அலுவலர்களுடன் கூடிய ஆய்வுக் கூட்டத்தில், திட்டங்களின் நிலை, சேவைகளின் முன்னேற்றம் குறித்து அலுவலர்கள் கருத்துகள் தெரிவித்தனர். இதன்போது பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களும் பெற்றுக்கொள்ளப்பட்டன. தகுதியான மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசு நலத்திட்டங்கள் அனைவருக்கும் தங்குதடையின்றி சென்றடைய வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தினார்.
இக்கால ஆய்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். எஸ். மகேஸ்வரன், கூடுதல் ஆட்சியர் செல்வி கே. சரண்யா, இ.ஆ.ப., வருவாய் கோட்டாட்சியர் திருமதி காயத்ரி, திட்ட அலுவலர் திருமதி பவித்ரா, வட்டாட்சியர் திரு. மனோகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்டம் முழுவதிலும் இருந்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.