பாலக்கோடு, ஜூன் 1:
முதல் சுழற்சியில் தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், பொது நிர்வாகம், இளமறிவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், புள்ளியியல், உளவியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுக் கட்டுப்பாடு, மிண்ணனு மற்றும் தொடர்பியல், இளவணிகவியல், இளவணிக நிர்வாகவியல், சமூகப்பணி உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடைபெறும்.
இரண்டாம் சுழற்சியில் புதியதாக தொடங்கப்பட்ட வரலாறு, இளமறிவியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினிபயன்பாடு, இளவணிகவியல் மற்றும் இளவணிக நிர்வாகவியல் ஆகிய பாடப்பிரிவுகள் தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் பயிற்றுவிக்கப்படும்.
மேலும் விளையாட்டு வீரர்கள், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் என்.சி.சி. மாணவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டு, ஜூன் 4 முதல் 14 ஆம் தேதி வரை பொது கலந்தாய்வு நடைபெற உள்ளது. இவ்வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர் தீர்த்தலிங்கம் அறிவுறுத்தியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக