பாலக்கோடு, ஜூன் 15-
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகிலுள்ள மேக்லாம்பட்டி ஏரி சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் காணப்படுகிறது. இந்த ஏரி, பாலக்கோடு, கடமடை, கரகத அள்ளி, செம்மநத்தம், பேளார அள்ளி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களின் நீராதாரமாக பயன்பட்டு வருகிறது. இதே நேரத்தில், இந்த ஏரியின் சுற்றுவட்டாரத்தில் சீமைக்கருவேல் மரங்கள் வெகுவாக வளர்ந்து, காடு போல் காட்சி அளித்து வந்தது. இதனால் பொதுமக்கள் நீண்ட நாட்களாகவே கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ.சதீஸ் இ.ஆ.ப. அவர்களின் ஆலோசனையின் பேரில், பல தொண்டு நிறுவனங்கள் இணைந்து, மேக்லாம்பட்டி ஏரியை சுற்றி உள்ள சீமைக்கருவேல் மரங்களை அகற்றி, சுற்றுச்சூழலை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணியை முன்னெடுத்த டாக்டர் கலாம் பசுமை நல அறக்கட்டளை, பசுமை மற்றும் கல்வி அறக்கட்டளை, தர்மம் அறக்கட்டளை, ஜெயம் சமுதாய வள மையம், ஆதி பவுண்டேஷன் ஆகிய அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட்டன. இந்த முயற்சிக்கு தமிழக முதல்வர் வழங்கும் "நீர்நிலை பாதுகாவலர் விருது" மாவட்டத்துக்கு வழங்கப்பட்டு பாராட்டப்பட்டது.
இதில் அறக்கட்டளை நிர்வாகிகள் சின்னமுத்து, சங்கர், சிவா, மகேந்திரன், செல்வராஜ், ராஜரத்தினம், செல்வி, ஆதிமூலம், தமிழரசு, வாசகர், சதிஷ், சீனிவாசன், மணிகண்டன், பழனி, குணா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக