Type Here to Get Search Results !

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து உயர்வு – 8 ஆயிரம் கனஅடி தாண்டியது.


பென்னாகரம், மே 20:

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் குடகு, மைசூரு, மாண்டியா, ராமநகர் மற்றும் தமிழகத்தின் ஓசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, கேரட்டி, பிலிகுண்டுலு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதன் விளைவாக ஒகேனக்கலுக்கு நேற்று 5,000 கனஅடி நீர் வந்த நிலையில், இன்றுகாலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து 8,000 கனஅடியாக உயர்ந்துள்ளது.

தண்ணீர் வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் அருவிகளில் செந்நிற தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டத் தொடங்கியுள்ளது. முக்கிய அருவிகள், சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் பார்வையாளர்களை கவரும் அளவுக்கு நீரின் அழுத்தம் அதிகரித்துள்ளது. இந்த நிலையை மையமாகக் கொண்டு, பிலிகுண்டுலு பகுதியில் உள்ள காவிரி நுழைவிடத்தில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நேரில் கண்காணித்து, நீர்வரத்தை அளந்து வருகின்றனர்.


பருவ மழைத் தொடக்கத்திலேயே நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், தொடக்கத்தில் வந்த இயற்கை வளம் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு நன்மை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies