இது குறித்து தகவல் அறிந்த, பாலக்கோடு வனச்சரகர் நடராஜ் தலைமையில், வனத்துறையினர் நேற்று மாலை எருதுகூடஅள்ளி பகுதிக்கு சென்று யானை நடமாட்டத்தை கண்காணித்தனர். அப்போது 3 காட்டு யாணைகள் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் சுற்றி திரிந்தது.
இதனை கண்ட வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானையை காப்புக் காட்டிற்க்குள் துரத்தினர். மேலும் அப்பகுதியில் வனத்துறையினர் தொடர்ந்து கண்கானிப்பு ஈடுபட்டு வருகின்றனர்.
காட்டிற்க்குள் விரட்டப்பட்ட யாணைகள் மீண்டும் காப்பு காட்டிற்க்கு அருகில் உள்ள எருது கூட அள்ளி, கனவஅள்ளி, செங்கோடபட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு வர வாய்ப்பு உள்ளதால் இரவு நேரங்களில் பொதுமக்கள் யாரும் வெளியே நடமாட வேண்டாம் எனவும், பாதுகாப்பாக இருக்கும்படியும், யாணைகள் நடமாட்டம் குறித்து தெரிய வந்தால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கும் படி வனசரக அலுவலர் நடராஜ் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக