பாலக்கோடு, மே 10 –
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி 8வது வார்டின் கனம்பள்ளி தெரு முதல் மந்தைவெளி வரை மற்றும் 2வது வார்டின் மாயன் கடை முதல் செங்காளியம்மன் கோயில் வரை, ரூ. 70 இலட்சம் மதிப்பீட்டில் புதிய மூடப்பட்ட கழிவுநீர் கால்வாய் மற்றும் தார் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் திரு. பி.கே. முரளி தலைமையிலாக பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். இத்திட்டம், நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. நிகழ்வில் பேரூராட்சி செயல் அலுவலர் இந்துமதி, திமுக ஒன்றிய செயலாளர் பி.எல்.ஆர். ரவி, மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர்கள் மோகன், குமரன், ஒன்றிய பிரதிநிதி பெரியசாமி, அவைத்தலைவர் முருகேசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
மேலும், கவுன்சிலர்கள் லட்சுமி ராஜசேகர், விமலன், சரவணன், திமுக கிளை செயலாளர்கள் ராஜீ, கணேசன், ராமமூர்த்தி, வடிவேல், ஆனந்தன், அன்பரசன், ஹரிபிரசாத், தகவல் தொழில்நுட்ப அணி நகர ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதரன், மற்றும் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக