தருமபுரி, மே 24 –
இந்த பயிற்சியில் பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் – பாரம்பரிய நீர்நிலைகளை பாதுகாப்பதன் மூலம் நீர் பாதுகாப்பையும், காலநிலை மாற்றத்திற்கான எதிரொலிகளை சமாளிப்பதையும் வலியுறுத்துவது ஆகும்.
பயிற்சியில், உள்ளூர் வெற்றிக்கதைகள், புதுமையான தீர்வுகள் மற்றும் பொறியியல் நுண்ணறிவுகள் பரிமாறப்பட்டன. கிராமப்புறங்களில் நீர் மேலாண்மை நடைமுறைகளை வலுப்படுத்தும் வகையில் பயிற்சியாளர்கள் பயனுள்ள ஆலோசனைகளை வழங்கினர்.
மாநில அளவிலான முயற்சியில் ஒரு முக்கிய அங்கமாக இந்த பயிற்சி அமைந்ததாகவும், எதிர்காலத்தில் நீர் பாதுகாப்பு மற்றும் காலநிலை மீள்தன்மைக்கு இது வழிகாட்டும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. இந்நிகழ்வில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செல்வி கே. சரண்யா, அறக்கட்டளை மதுரை தலைமை நிர்வாகி திரு. வெங்கடேசன், அரூர் TVS சேவை அறக்கட்டளை குழுமத்திலிருந்து திரு. ஜெயபால் ஸ்ரீநிவாசா, நீர்வளத்துறை ஓய்வுபெற்ற பொறியாளர் திரு. இராமசந்நிரன், ஓசூர் மக்கள் சமூக அமைப்பின் திரு. பிரசாத் உள்ளிட்ட பல துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் வல்லுநர்கள் கலந்துகொண்டு பயிற்சியில் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்தனர். இந்த நிகழ்ச்சி, தருமபுரி மாவட்டத்தில் நீர் வளங்களை பாதுகாப்பதற்கான செயல்திட்டங்களில் ஒரு முக்கிய முன்னேற்றமாக காணப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக