Type Here to Get Search Results !

மாரண்டஅள்ளியில் அதிமுக அம்மா பேரவை திண்ணை பிரச்சாரம்: முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் பங்கேற்பு.


மாரண்டஅள்ளி, மே 04:

மாரண்டஅள்ளி பகுதியில் அதிமுக அம்மா பேரவை சார்பில் திண்ணை பிரச்சாரம் மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் எஸ்.ஆர். வெற்றிவேல் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அதிமுக கழக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் மற்றும் மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ. கே.பி. அன்பழகன் பங்கேற்று மாரண்டஅள்ளி பேருந்து நிலையத்திலிருந்து இந்தியன் வங்கி வரை நடைபயணம் மேற்கொண்டு கடைவீதிகளில் பிரச்சாரம் செய்தார்.

பிரச்சாரத்தின் போது, அதிமுக அரசின் சாதனைகள் பற்றிய விழிப்புணர்வும், தற்போதைய திமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள் குறித்து விமர்சனமும் வெளிப்படுத்தப்பட்டது. திமுக அரசு மின்வசதி கட்டணம், சொத்து வரி, உணவுப் பொருட்கள் விலை உயர்வு மூலம் மக்கள் மீது பாரிய சுமை ஏற்படுத்தியுள்ளது என்றும், சட்ட ஒழுங்கு பிரச்சனை அதிகரித்துள்ளதையும் கூறி துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் வக்கில் செந்தில், கோபால், நகர செயலாளர்கள் கோவிந்தன், ராஜா, மற்றும் ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884