Type Here to Get Search Results !

பாலக்கோடு அருகே பூச்சிக்கொல்லி மருந்தை தவறுதலாக உட்கொண்ட மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.


பாலக்கோடு, மே 16
 –

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள மண்டுகொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த சின்னராஜ் என்பவரின் மகன் கிரி (13), காரிமங்கலம் அருகேயுள்ள பொன்னேரி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு மாணவனாக பயின்று வந்தார்.

வீட்டுவிடுமுறைக்காக மண்டுகொட்டாய்க்கு வந்திருந்த அவர், கடந்த 14ஆம் தேதி விவசாய பயன்பாட்டுக்காக வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை தவறுதலாக உட்கொண்டதாக கூறப்படுகிறது. உடல்நலக் குறைபாடுடன் இருந்த மாணவனை, அவரது குடும்பத்தினர் உடனடியாக பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், மே 16ஆம் தேதி அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


இது குறித்து தகவலறிந்த பாலக்கோடு போலீசார், மாணவனின் உடலை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி உள்ளனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


👉 குறிப்பு:
தற்கொலை ஒரு தீர்வு அல்ல. மன அழுத்தம், தேர்வுத் தோல்வி, மற்றும் வாழ்க்கை சிரமங்களால் பாதிக்கப்படுகிறீர்களா? தயங்காமல் ஆலோசனை பெறுங்கள். உங்கள் வாழ்க்கை அருமையானது, உதவி எப்போதும் கிடைக்கும்.

📞 மாநில உளவியல் ஆலோசனை மையம்
மனநலம் மற்றும் ஆலோசனை உதவி எண்: 104 (தமிழ்நாடு அரசு ஹெல்ப்லைன்)
Snehi (தன்னார்வ அமைப்பு): 91-9582208181
iCall (TISS): +91-9152987821
(தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை)

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies