Type Here to Get Search Results !

வெள்ளி சந்தையில் ரேஷன் அரிசி கடத்தல்: இரண்டு பேர் கைது.


தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள வெள்ளிசந்தை 4 ரோடு பகுதியில், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 
அப்போது அந்த வழியாக வந்த மினி சரக்கு வாகனமொன்று சந்தேகத்திற்கிடமாகத் தோன்றியதால் அதை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் சட்டவிரோதமாக 4100 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.


வாகன ஓட்டுநரை கைது செய்து விசாரித்ததில், அவர் பாலக்கோடு கோட்டை தெருவை சேர்ந்த சரவணன் (35) என்றும், உடன் வந்தவர் அதே பகுதியை சேர்ந்த நவாப்ஜான் (60) என்றும் தகவல் தெரியவந்தது. இவர்கள் இந்த ரேஷன் அரிசியை கர்நாடகா மாநிலம் பங்கார்பேட்டை நோக்கி கடத்தி சென்றிருந்தது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுத்து சிறையில் அடைக்கப்பட்டனர். கடத்தல் தொடர்பான மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies