Type Here to Get Search Results !

தர்மபுரி மாவட்டத்தில் துரையன் ஏரியில் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி தீவிரம்.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள சூடானூர் ஊராட்சி நாகனூர் கிராமத்தில் அமைந்துள்ள துரையன் ஏரியில், சீமை கருவேல மரங்களை முற்றிலும் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஏரி சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் உள்ளதுடன், சூடானூர் பஞ்சாயத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்களின் முக்கிய நீராதாரமாக விளங்குகிறது.


ஏரியின் முழு பரப்பிலும் சீமை கருவேல மரங்கள் பரவியுள்ளதால், பொதுமக்கள் நீண்ட காலமாக அவற்றை அகற்ற கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து, தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், பாலக்கோடு வட்டார வளர்ச்சித் துறை அலுவலர் திருமதி ரேணுகா மேற்பார்வையில், சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி தொடங்கப்பட்டது.


இந்த பணியில், டாக்டர் கலாம் பசுமை நல அறக்கட்டளை, பசுமை மற்றும் கல்வி அறக்கட்டளை, தர்மம் அறக்கட்டளை ஆகிய தொண்டு நிறுவனங்கள் இணைந்து செயல்பட்டு வருகின்றன. சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊர் பொதுமக்களும் இதில் பங்கேற்று, ஏரியின் இயற்கை சூழலை மீட்டெடுக்க உறுதுணையாக உள்ளனர்.


சூடானூர் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் திரு. வள்ளிநாகன் இந்த பணியை முன்னிலை வகித்து தொடங்கி வைத்தார். இந்த முயற்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீர்நிலைகளின் பசுமை பராமரிப்பில் முக்கியமான படியாகும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884