Type Here to Get Search Results !

தருமபுரி ஊரக வளர்ச்சி துறை பயன்பாட்டிலிருந்த வாகனம் பொது ஏலம் - மே 13 அன்று நடைபெறும்.

மாதிரி படம்.

தருமபுரி, மே 3, 2025: தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகின் கீழ், பென்னாகரம் உபகோட்ட உதவி செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி) பயன்பாட்டில் இருந்த TN 29 G 0734 என்ற பதிவு எண்ணுடைய ஈப்பு வகை வாகனம், நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளின்படி கழிவு செய்யப்பட்டு, அதை பொது ஏலுக்கு விட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.


இவ்வாகனத்திற்கான பொது ஏலம், 13.05.2025 (செவ்வாய்க்கிழமை) அன்று பிற்பகல் 4.00 மணிக்கு, தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மற்றும் திட்ட இயக்குநர் தலைமையில் நடைபெற உள்ளது.


இந்த ஏலத்தில் பங்கேற்க விரும்பும் நபர்கள், குறித்த நாளில் நேரில் வருகை தந்து விலைப்புள்ளிகளை (bids) பதிவு செய்யலாம். ஏல விதிமுறைகள் மற்றும் வாகனத்தின் நிலை குறித்து மேலதிக தகவல்களும் அதே இடத்தில் வழங்கப்படும். இது தொடர்பாக, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநராக பணியாற்றும் செல்வி அ. கேத்தரின் சரண்யா அவர்கள், பொதுமக்கள் மற்றும் ஆர்வமுள்ள வர்த்தகர்களை இந்த ஏலத்தில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884