தருமபுரி, மே 3, 2025:
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான சிறப்பு குறைதீர்ப்பு நாள் கூட்டம், உடல் ஊனமுற்ற நபர்களுக்கான நிதியுதவி வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம் ஆகியவை வருகிற 08.05.2025 (வியாழக்கிழமை) அன்று மாலை 4.00 மணிக்கு, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூடுதல் கூட்டரங்கில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் அறிவித்துள்ளார்.
இந்த முகாமில், முடநீக்கு மருத்துவர்கள், காது-மூக்கு-தொண்டை மருத்துவர்கள் மற்றும் மனநல மருத்துவர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் கலந்து கொள்ளும் முன்னாள் படைவீரர்கள், தங்களது உடல் ஊனத்தின் தன்மை 60% என்பதற்கான மருத்துவ உறுதிப்பத்திரம் பெற்றால், தமிழ்நாடு முன்னாள் படைவீரர் நல நிதியிலிருந்து நிதியுதவி பெறுவதற்கான தகுதி ஏற்படும்.
இத்துடன், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது சார்ந்தோர் கொண்டிருக்கும் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் பிரச்சனைகள் குறித்து அரசு தரப்பில் நேரடியாக ஆலோசிக்கவும், தீர்வு காணவும் இந்த குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறுகிறது. எனவே, பங்கேற்க விரும்பும் நபர்கள் தங்களது மனுக்களை இரட்டை நகலில் தயாரித்து கொண்டு வருமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இம்முகாம் மூலம் முன்னாள் படைவீரர்கள் மற்றும் உடல் ஊனமுற்றோர் பலனடைந்து, தேவையான அரசாங்க உதவிகளை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக