Type Here to Get Search Results !

பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் முன்பு இலவச வீட்டு மனை பட்டா கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காத்திருப்பு போராட்டம்.


பாலக்கோடு, மே 12:

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் முன்பு இலவச வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வட்ட செயலாளர் காரல்மார்க்ஸ் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாநில செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன் மற்றும் மாவட்ட செயலாளர் சிசுபாலன் முன்னிலை வகித்தனர்.


பாலக்கோடு மற்றும் காரிமங்கலம் வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீடு இல்லாமல் தவித்து வரும் மக்கள், அரசு புறம்போக்கு நிலத்தில் வீடுகளை கட்டி பல ஆண்டுகளாக குடியிருந்துவரும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் இலவச வீட்டுமனை பட்டா கோரிக்கையுடன் பல ஆண்டுகளாக மனுக்களை அளித்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், அதற்கெதிராகவும் போராட்டம் நடத்தப்பட்டது.


மேலும், குறித்த நிலங்களில் குடியிருந்து வருபவர்கள் மீது “ஆக்கிரமிப்பு அகற்றம்” என்ற பெயரில் மிரட்டல்கள் நடைபெற்று வீடுகள் இடிக்கப்பட்டு மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும், இது போன்ற செயற்பாடுகள் மக்களின் வாழ்வாதாரத்துக்கு எதிரானது எனக் கூறி, தமிழக அரசு மற்றும் வருவாய் துறை அதிகாரிகளின் நடவடிக்கைகளை கடுமையாக கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்த போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நாகராசன், முத்து, கலாவதி உள்ளிட்ட கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது உரிமைகளை வலியுறுத்தினர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies