
பாலக்கோடு, மே 20 –
சமத்துவபுரம், கக்கன்ஞ்சிபுரம், தளவாய்ஹள்ளி புதூர் உள்ளிட்ட கிராம மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி ரெட்டியூர் கிராமத்தில் உள்ள சுடுகாட்டிற்கு செல்கிறார்கள். மேலும், இச்சாலை வழியாக பள்ளி, கல்லூரி வாகனங்கள், விவசாய பயன்பாட்டிற்கான கரும்பு மற்றும் பிற பொருட்கள் ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் தொடர்ந்து இயங்குகின்றன.
20 ஆண்டுகளுக்கும் மேலாக இச்சாலை மண் சாலையாகவே இருந்து வருகிறது. மழைக்காலங்களில் இந்த சாலை சேறும் சகதியுமாக மாறி, பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. வெள்ளம் சூழும் போது வாகனங்கள் சிக்கிக்கொள்ளும் நிலையும் காணப்படுகிறது. பள்ளங்கள் மற்றும் குண்டுகள் காரணமாக விபத்து ஏற்படும் அபாயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதையடுத்து, “மக்களின் உயிர் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் விரைவில் சாலையை சீரமைத்து தர வேண்டும்” என அந்தப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். சம்பந்தப்பட்ட ஊராட்சி, ஊரக வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு துறைகள் உடனடி நடவடிக்கை எடுத்து, சாலை மேம்பாட்டு பணிகளை துவக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக