பாலக்கோடு, மே 3:
இந்நிலையில் நேற்று இரவு, சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்ததால், பப்பாளி மரங்கள் பலவும் வேறோடு சாய்ந்தும், சில இரண்டாக உடைந்து, பெரும் சேதத்துக்கு உள்ளானது. பல பழங்கள் மண்ணில் விழுந்து நாசம் அடைந்துள்ளன. இதனால் பண்ணையில் பெரியளவில் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.
பப்பாளி அறுவடைக்கு இவ்வளவு நாள் காத்திருந்து, கடன் வாங்கி பயிரிட்டு இருந்த நிலையில் இவ்வாறு சேதம் ஏற்படுவதால், விவசாயி ராமன் கடன் சுமையில் சிக்கி வருகிறார். மேலும், இதுவரை வருவாய் துறை அல்லது வேளாண்மை துறையினரால் எந்தவிதமான பார்வையும், ஆய்வும் நடத்தப்படவில்லை என அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
“எனது வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு தற்காலிக நிவாரண நிதியாகவோ அல்லது பயிர்ச் சேத நஷ்டஈடாகவோ, உரிய தொகையை வழங்க வேண்டும்” என விவசாயி ராமன் மனமுவந்து கோரிக்கை விடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக