இந்த முயற்சியின் மூலம், இயற்கை பேரழிவுகள், விபத்துகள் மற்றும் பொது அவசரநிலைகளில் மக்கள் பாதுகாப்பிற்காக பணியாற்றும் பயிற்சி பெற்ற இளைஞர்களைக் கொண்ட ஒரு தன்னார்வ படை உருவாக்கப்பட உள்ளது.
சிவில் பாதுகாப்பு தன்னார்வலர்கள் கீழ்க்காணும் பணிகளில் அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உதவவுள்ளனர்:
-
மீட்பு மற்றும் வெளியேற்ற நடவடிக்கைகள்
-
முதலுதவி மற்றும் அவசர சிகிச்சை
-
போக்குவரத்து மற்றும் கூட்டக் கட்டுப்பாடு
-
பொதுப் பாதுகாப்பு
-
பேரிடர் மறுவாழ்வு சேவைகள்
இந்த சேவையில் சேரும் இளைஞர்களுக்கு தேசியம் குறித்த விழிப்புணர்வு மட்டுமல்லாமல், உயிர் காக்கும் பயிற்சிகளும் வழங்கப்படும். இது அவர்களுக்கு சமூக பொறுப்புணர்வையும், தேசிய சேவையிலும் பங்களிக்கும் வாய்ப்பையும் ஏற்படுத்தும்.
புதிய இளைஞர்கள் மட்டும் அல்லாமல், ஏற்கனவே MY பாரத் தன்னார்வலர்களாக இருப்பவர்களும் இதில் இணையலாம். நாட்டின் நலனுக்காக தங்களது நேரத்தையும் திறமையையும் வழங்க விரும்பும் இளைஞர்கள் இந்த தன்னார்வ சேவையில் பங்கேற்கலாம்.
தகவல் தொடர்புக்கு:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக