அதனடிப்படையில் பாலக்கோட்டில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா, அவர்கள் மேற்பார்வையில் காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் உள்ளிட்ட குழுவினர் பாலக்கோட்டில் மயோனஸ் விற்பனை செய்யும் மொத்த மற்றும் சிறு வியாபாரிகள், பயன்படுத்தும் அசைவ உணவகங்கள் மற்றும் துரித உணவகங்களில் ஆய்வு செய்து, பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் முறையாக சேமிக்காபடாமையால் , தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களால் மாசுபடுவதால் பதப்படுத்தப்படாத பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் இரைப்பை, குடல் தொற்று மற்றும் உணவு நஞ்சாகுதல்(புட் பாய்சன்) போன்ற நோய்கள் ஆபத்தை ஏற்படுத்தும். எனவே தமிழக அரசு பதப்படுத்தப்படாத பச்சை முட்டையிலிருந்து( Raw Egg) தயாரிக்கப்படும் மயோனைஸ்க்கு ஓராண்டுக்கு தடை விதித்துள்ளது.
மற்றபடி பாக்கெட்டுகளில் உரிய லேபிள் விவரங்களுடன் உணவு பாதுகாப்பு உரிம எண்ணுடன் கூடிய சைவ மயோனைஸ், பதப்படுத்தப்பட்ட முட்டையிலிருந்து தயாரிக்கப்பட்ட மயோனைஸ் பாக்கெட்டுகள் உரிய முறையில் உணவு பாதுகாப்பு துறையில் விண்ணப்பித்து உணவு பாதுகாப்பு உரிமம் எண் மற்றும் விபரங்கள் அச்சிடப்பட்ட பதப்படுத்தப்பட்ட முட்டையில் இருந்து தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வரும் மயோனஸ் பாக்கெட்டுகளுக்கு தடை விதிக்கப்படவில்லை என விழிப்புணர்வு செய்தார்.இது குறித்து விழிப்புணர்வு பிரசுரங்களும் வழங்கினார். நுகர்வோர் காணும் வகையில் உணவகங்கள், விற்பனை நிறுவனங்களில் பிரசுரங்களை ஒட்டினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக