பெரியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய பேராசிரியருக்கு மாநில அளவிலான விருது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 10 மே, 2025

பெரியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய பேராசிரியருக்கு மாநில அளவிலான விருது.


தர்மபுரி அடுத்த பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய ஆங்கிலத்துறை தலைவரும் முன்னாள் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலருமான பேராசிரியர் முனைவர் சி.கோவிந்தராஜ் அவர்களுக்கு 2022-2023 கல்வி ஆண்டுக்கான மாநில அளவிலான சிறந்த நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு,  கல்லூரி கல்வி இயக்கக ஆணையர் திருமதி சுந்தரவல்லி ஐஏஎஸ் அவர்கள் இவ்விருதினை வழங்கினார். 


மாநில அளவில் விருது பெற்ற பேராசிரியர் கோவிந்தராஜ் அவர்களை பெரியார் பல்கலைக்கழக மாண்புமிகு  துணைவேந்தர் பேராசிரியர் ஜெகநாதன் அவர்களும் மற்றும் பதிவாளர் பேராசிரியர் ராஜ், புல முதன்மையர் பேராசிரியர் ஜெயராமன் ஆகியோர மற்றும் பெரியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய இயக்குனர் (பொ) முனைவர் மோகனசுந்தரம்,  ஏனைய பிற துறை தலைவர்கள் மற்றும்  பேராசிரியர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad