Type Here to Get Search Results !

தூய்மையான முறையில் பட்டுப்புழு வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்த மாணவர்கள் – தருமபுரி மாவட்டத்தில் வனக்கல்லூரி மாணவர்கள் கள அனுபவத்தில் ஈடுபாடு.


தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் பட்டுப்புழுவியல் துறையில் நான்காம் ஆண்டு இளம் அறிவியல் (மேதமை) பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் ப.மா. தீபக், சி. தேவானந், ரா. கணேஷ், பு. கௌதம் மற்றும் ர. ஜெயராமன் ஆகியோர், ஊரக பட்டுப்புழுவியல் பணி அனுபவத்திட்டம் (RSWE) கீழ் இரண்டு மாத காலம் தருமபுரி மாவட்ட பட்டு வளர்ச்சி துறையில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.


பயிற்சியின் ஒரு பகுதியாக, இம்மாணவர்கள் அரூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பட்டுப்புழு விவசாயிகளை நேரில் சந்தித்து, தொழில்நுட்ப விளக்கங்களை வழங்கினர். குறிப்பாக, கம்பை நல்லூர், மொரப்பூர், அம்மாபேட்டை, ஜடையம்பட்டி, அப்பியம்பட்டி, சந்தப்பட்டி, ஒடசல்பட்டி, தின்னப்பட்டி, கதிர்நாயக்கனஅள்ளி, கடத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் தொடர்பில் இருந்தனர்.


பட்டு வளர்ச்சித் துறையின் உதவி ஆய்வாளர் சசிகலா மற்றும் இளநிலை ஆய்வாளர்கள் அனிதா, ரம்யா, நடராஜன் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் பயிற்சி நடைப்பெற்றது. மாணவர்கள், நோய் பாதிப்பு இல்லாத தூய்மையான முறையில் பட்டுப்புழு வளர்ப்பு செய்வது குறித்தும், புழுக்களின் வளர்ச்சிக்கான சரியான சூழ்நிலை மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கங்களை வழங்கினர்.


விவசாயிகள் எழுப்பிய சந்தேகங்களுக்கு தெளிவான பதில்கள் அளித்து, அவர்களின் நம்பிக்கையை வளர்த்த இம்மாணவர்கள், நவீன தொழில்நுட்பங்களையும் அறிமுகப்படுத்தினர். இது, பாரம்பரியமாக இயங்கும் பட்டுப்புழு வளர்ப்பு தொழிலுக்கு புதிய பரிணாமம் கொடுக்கக்கூடிய முயற்சியாக அமைந்தது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884