Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

தருமபுரி மாவட்ட குழந்தைகள் இல்ல மாணவர்கள் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பாக தேர்ச்சி – மாவட்ட ஆட்சியரால் பாராட்டு.

 

தருமபுரி, மே 19:

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் அடிப்படை வசதிகளைப் பற்றிய கோரிக்கைகளை உள்ளடக்கிய மொத்தம் 530 மனுக்கள் பெறப்பட்டன. இதில், சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து சேவை, பட்டா வழங்கல், குடும்ப அட்டை, வாரிசுச் சான்றிதழ், வேலைவாய்ப்பு வாய்ப்பு, முதியோர் ஓய்வூதியம், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறிப்பிடத்தக்கவையாக இருந்தன.


அரசின் விதிமுறைகளுக்கேற்ப தகுதியான மனுக்களுக்கு விரைவாக தீர்வு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் பொதுமக்களின் கோரிக்கைகள் மீது முக்கியத்துவம் அளித்து, உரிய நடவடிக்கைகள் உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும் எனக் கூறியிருந்ததை ஆட்சித்தலைவர் நினைவூட்டினார்.


இதே கூட்டத்தில், இளஞ்சிறார் நலன் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 18 குழந்தைகள் இல்லங்களில் தங்கி அரசு பள்ளிகளில் பயின்று, 2024-2025ஆம் கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 62 மாணவ, மாணவிகள் குறித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த மாணவர்களில் 483 மதிப்பெண் பெற்ற மாணவனும், 400க்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற 20 மாணவ, மாணவிகளும் மாவட்ட ஆட்சித்தலைவரால் நேரில் பாராட்டப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. அவர்களின் கல்வியைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் வகையில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.


மேலும், தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் சிரியனஹள்ளி பகுதியைச் சேர்ந்த கேபிள் டிவி ஆபரேட்டராக பணியாற்றும் திரு. முனிராஜ் அவர்களுக்கு, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் ரூ.75,000 மதிப்பிலான 150 எச்டி செட் டாப் பாக்ஸ் வழங்கப்பட்டன. இந்த உதவியை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் வழங்கி தொழில் முனைவோரை ஊக்குவிக்க தேவையான ஆதரவுகள் தொடரும் என தெரிவித்தார்.


இந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆர். கவிதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி ஜோதிசந்திரா, தனித்துணை ஆட்சியர் திரு. சுப்பிரமணி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு. செல்வம் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884