மொரப்பூர் – தருமபுரி புதிய அகல இரயில் பாதை திட்டம் தீவிரமாகும்: மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 11 மே, 2025

மொரப்பூர் – தருமபுரி புதிய அகல இரயில் பாதை திட்டம் தீவிரமாகும்: மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு.


தருமபுரி
, மே 11, 2025 –

தருமபுரி மாவட்டம், மொரப்பூர் வட்டம், போளையம்பள்ளி மற்றும் செட்டிக்கரை ஊராட்சி, இராஜாப்பேட்டையில் அமைக்கவுள்ள மொரப்பூர் – தருமபுரி புதிய அகல இரயில் பாதை திட்டம் தொடர்பாக, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (11.05.2025) நேரில் கள ஆய்வு மேற்கொண்டார்.

இத்திட்டத்திற்காக அரசு வெளியிட்ட அரசாணை எண் 54 (போக்குவரத்து (ஐ1) துறை நாள்: 17.04.2023) அடிப்படையில், தருமபுரி மாவட்டத்தின் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் தருமபுரி வட்டங்களில் உள்ள 18 கிராமங்களில் மொத்தம் 194 ஏக்கர் (78.54.56 ஹெக்டேர்) பட்டா நிலங்கள் நில எடுப்புக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதோடு, 33 ஏக்கர் (13.43.56 ஹெக்டேர்) extent-இல் அரசு புறம்போக்கு நிலங்களும் நிலமாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளன.


134 ஏக்கர் (54.14.54 ஹெக்டேர்) நிலத்திற்கு நில எடுப்பு அறிவிப்புகள் (3(2) மற்றும் 3(1)) பிரசுரிக்கப்பட்டு, 4322 பட்டதாரர்களில் 1686 பேருக்கு ரூ. 33.54 கோடி இழப்பீட்டு தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டு, இதுவரை ரூ.17.03 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 70 ஏக்கர் நிலங்களுக்கு தீர்வு பிறப்பிக்கப்பட்டு, 64 ஏக்கர் நிலங்களுக்கு தீர்வு பிறப்பிக்கவேண்டும் என்ற நிலை உள்ளது. அனைத்து நில எடுப்பு பணிகளும் 31.05.2025க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


மீதமுள்ள 60 ஏக்கர் நிலங்களுக்கு மாற்றுப்பாதை அமைக்கும் திட்டங்கள் முன்னேறி வருகின்றன. மேலும், 18 ஏக்கர் extent-இல் அரசு புறம்போக்கு நிலங்களை கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மீதமுள்ள 15 ஏக்கர் extent மாற்றுப்பாதையின் அடிப்படையில் செயல்படுத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இத்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும், மாநில முதல்வர் வழிகாட்டியப்படி ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு அரசின் விதிமுறைகளின் அடிப்படையில் பட்டா வழங்கும் நடவடிக்கை நடைமுறையில் உள்ளது.


இதையடுத்து, செட்டிக்கரை ஊராட்சி, இராஜாப்பேட்டையில் வசிக்கும் பயனாளிகள் தகுதியுடையவர்களா என்பதை நேரில் சென்று ஆவணங்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், அனைத்து நடவடிக்கைகளும் மக்களின் நலனைக் கருதி எடுக்கப்படும் என தெரிவித்தார்.


மேலும், தருமபுரி நகராட்சி சந்தைப்பேட்டையில்கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்’ கீழ் கட்டப்பட்ட நூலகம் மற்றும் அறிவுசார் மையம் உள்ளிட்ட கட்டிடங்களில் உள்ள கூட்ட அரங்கம், வகுப்பறை, கணினி வசதி, கழிவறை, குடிநீர், மின்சார வசதிகள் ஆகியவற்றை பார்வையிட்டு, மாணவர்களிடமிருந்து நேரடியாக கருத்துகளும் கேட்டு தெரிந்துகொண்டார்.


இந்த நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆர். கவிதா, அரூர் வருவாய் கோட்டாட்சியர் திரு. சின்னுசாமி, வட்டாட்சியர்கள் திரு. சண்முகசுந்தரம், திருமதி. கலைச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad