தருமபுரியில் இரண்டு நாட்கள் அரசு நிகழ்ச்சிகளை முன்னிட்டு வருகை தரும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 4 மே, 2025

தருமபுரியில் இரண்டு நாட்கள் அரசு நிகழ்ச்சிகளை முன்னிட்டு வருகை தரும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.


தருமபுரி, மே 04:

மாண்புமிகு தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்கள், தருமபுரி மாவட்டத்தில் மே 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள பல்வேறு அரசு விழாக்கள் மற்றும் திட்டப் பணிகளில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்.


முதலில், மாவட்டத் துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்று, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழிகாட்டுதல்படி நடைபெறும் வளர்ச்சி பணிகளை பார்வையிட உள்ளார். தருமபுரி பேருந்து நிலையத்தில் புதிய வழித்தடங்களில் இயக்கப்பட உள்ள பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைக்கவுள்ளார்.


இதனைத் தொடர்ந்து அரூர் மற்றும் கோட்டப்பட்டியில் நடைபெறும் விழாவில் பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார். மேலும், அரூர் செல்லம்பட்டியில் ₹6.45 கோடியில் அரசு தொழிற்பயிற்சி நிலைய கட்டடத்திற்கும், பாலக்கோட்டுப் பஞ்சப்பள்ளி அணைக்கட்டின் ₹5.50 கோடி மதிப்பீட்டிலான புனரமைப்பு பணிகளுக்கும் அடிக்கல் நாட்டவுள்ளார்.


இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியர், மக்களவை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad