Type Here to Get Search Results !

தர்மபுரி அதியமான் மேல்நிலைப் பள்ளி 1980ஆம் ஆண்டு மாணவர்கள் சந்திப்பு உற்சாகமாக நடந்தது.

தர்மபுரி, மே 04:

தர்மபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1980ஆம் ஆண்டு கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் இரண்டாம் ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி, தர்மபுரி செந்தில் நகர் பகுதியில் உள்ள வின்சன் திருமண மண்டபத்தில் கடந்த வாரம் உற்சாகமாக நடைபெற்றது.


இந்த நிகழ்வில் பரதநாட்டியம், சிவன்–பார்வதி நடனம் உள்ளிட்ட பல்வேறு கலாப் பார்வைகள் நடைபெற்றன. முன்னாள் மாணவர் திரு. ரவி வரவேற்புரை ஆற்றினார். முன்னாள் ஆசிரியர்கள் மாணிக்கம், புலவர் தியாகசீலன், தியாகராஜன், கோபாலகிருஷ்ணன், பொன்னுசாமி ஆகியோர் சிறப்புரை வழங்கினர்.


நிகழ்வின் முக்கிய அம்சமாக கவிதை, ஆன்மீகம், யோகா, நட்பு தொடர்பான சிறப்புரை, பாடல்கள் மற்றும் குழு நடன நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. ஒருங்கிணைப்பாளராக ஆசிரியர் சௌந்தரபாண்டியன் பணிபுரிந்தார். முன்னாள் மாணவர்கள் சிவராமகிருஷ்ணன், இளங்கோ, ரவி, பிரபாகரன், வள்ளலார் கண்ணன், நேவிக்குமார், செல்வம், அதியமான் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தனர்.


முன்னாள் மாணவர்கள், தங்களின் ஆசிரியர்களை சந்தித்து, அவர்களுக்கு பாராட்டுச் சேலையை வழங்கி மரியாதை செலுத்தினர். அரசு பணியில் உள்ள 150-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் இதில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியின் இறுதியில் திரு. சீனிவாசன் நன்றி கூறி விழாவை நிறைவு செய்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884