தருமபுரி, மே 4:
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (04.05.2025) அங்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து, நாளை 05.05.2025 அன்று சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் நடைபெறும் விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் புதிய சிறு விளையாட்டரங்கத் திட்டத்தின் அடிக்கல் நாட்டுகிறார்.
7 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் விளையாட்டரங்கம்: பலவிதமான விளையாட்டு உபகரணங்களுடன்
பருவதனஅள்ளியில் அமைக்கப்படவுள்ள இந்த விளையாட்டரங்கம் கீழ்காணும் வசதிகளை கொண்டிருக்கும்:
-
400 மீ. தடகள ஓடுதளம்
-
கால்பந்து மைதானம்
-
வாலிபால், கோ-கோ, கபடி மைதானங்கள்
இந்த திட்டம், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 2022–23 நிதியாண்டில் அறிவித்த ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ரூ.3 கோடி மதிப்பீட்டில் சிறு விளையாட்டரங்கம் அமைக்கும் யோசனையின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.
தருமபுரி மாவட்டத்தில் ஏற்கனவே,
-
தருமபுரி சட்டமன்ற தொகுதியில் மாவட்ட விளையாட்டரங்கம்,
-
அரூர் தொகுதியில் சிறு விளையாட்டரங்கம் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது.
மேலும், பாலக்கோடு மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிகளிலும் இத்தகைய மையங்கள் அமைக்கும் பணிகள் முன்னேறி வருகின்றன. தேர்ந்தெடுக்கப்படும் வீரர், வீராங்கனைகள் பயிற்சி பெறும் வகையில் “STAR” (Sports Talent Advancement & Recognition) எனும் உயர் தர விளையாட்டு திறன் மேம்பாட்டு மையம் தருமபுரியில் அமைக்கப்படும். இத்துடன், இறகுபந்து அகாடமியும் திறக்கப்பட உள்ளது.
இதையடுத்து, பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு, சிகிச்சை தரம், உணவு தரம், விஷமருந்து கையிருப்பு போன்றவற்றை ஆய்வு செய்தார். மேலும், ரூ.10 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு, முதலமைச்சரால் விரைவில் திறக்கப்படவுள்ள புதிய மருத்துவமனை கட்டிடத்தையும் அவர் பார்வையிட்டார். இந்நிகழ்வுகளில் மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அலுவலர் திருமதி தே. சாந்தி, பென்னாகரம் வட்டாட்சியர் திரு. பிரசன்னமூர்த்தி, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பல அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக