பாலக்கோடு அருகே பெல்ரம்பட்டியில் சூறை காற்று மற்றும் ஆலங்கட்டி மழை: தக்காளி தோட்டம் முற்றிலும் சேதம் – நஷ்ட ஈடு கோரிக்கை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 4 மே, 2025

பாலக்கோடு அருகே பெல்ரம்பட்டியில் சூறை காற்று மற்றும் ஆலங்கட்டி மழை: தக்காளி தோட்டம் முற்றிலும் சேதம் – நஷ்ட ஈடு கோரிக்கை.


பாலக்கோடு, மே 5:

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பெல்ரம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு வீசிய சூறாவளி காற்றும், பெய்த ஆலங்கட்டி மழையும் விவசாயத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெல்ரம்பட்டி, கரகூர், சீரியம்பட்டி, திருமல்வாடி, கரிகுட்டனூர், சீங்காடு, பெல்லுஅள்ளி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் தக்காளி, நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

அதில், சுமார் 100 ஏக்கர் தக்காளி தோட்டம் சாய்ந்து நீரில் மூழ்கி முற்றிலும் சேதமடைந்துள்ளதாகவும், மற்ற பயிர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


பெல்ரம்பட்டியை சேர்ந்த விவசாயி ராஜன் கூறுகையில்:

“நேற்றிரவு பெய்த வான்மழையும், சூறாவளிக் காற்றும் எனது தக்காளி தோட்டத்தை முற்றிலும் அழித்துவிட்டன.
ஏற்கனவே கிலோ ரூ.4 என்ற குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய சூழ்நிலையிலும், கூலி கூட எடுக்க முடியாத நிலைக்கும் வந்திருந்தோம்.
இந்நிலையில் இழந்த நஷ்டத்தை அரசு நேரில் வந்து ஆய்வு செய்து, உரிய நஷ்ட ஈடாக இழப்பீடு வழங்க வேண்டும்.” எனக்கோரியுள்ளார்.


இந்நிலையைக் கருத்தில் கொண்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad