கோடை விடுமுறையையொட்டி ஒகேனக்கல் சுற்றுலா மையத்திற்கு தினசரி பெருந்தொகையிலான மக்கள் வருகை தருகின்றனர். சுற்றுலா பயணிகள் ஆபத்தான பகுதிகளில் கவனமின்றி குளிப்பதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ஒகேனக்கல் காவல்துறை மற்றும் மத்திய சமூக ஆர்வலர்கள் நலச்சங்கம் இணைந்து விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
ஒகேனக்கல் காவல் ஆய்வாளர் முரளி தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்வின் போது, ஐந்து மொழிகளில் எச்சரிக்கை பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் ட்ரோன் மூலம் காவேரி ஆற்றின் ஆழமான பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
பயணிகள் அதிகம் குளிக்கின்ற பரிசல் துறை, நாகர்கோவில் முதலைப் பண்ணை, ஏத்த மடுவு, ஊட்டமலை, நாடார் கோட்டை, ஆலம்பாடி போன்ற ஆபத்தான இடங்களில் குளிக்க வேண்டாமென விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. சட்டத்தை மீறி ஆபத்தான இடங்களில் குளிப்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு நடவடிக்கையில் காவல்துறையினரும், சமூக ஆர்வலர்களும் முழுமையாக ஈடுபட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக