Type Here to Get Search Results !

பாலக்கோட்டில் முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் முன்னிலையில் மாற்று கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர்.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் நேற்று நடைபெற்ற சிறப்பு விழாவில், பல்வேறு மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் அதிமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு பாலக்கோடு வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் செந்தில் தலைமை தாங்கினார். இதில் கணபதி ஊராட்சிக்குட்பட்ட பெல்ரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கண்ணன், வேலு, குமார், ஸ்ரீகாந்த், கோவிந்தராஜ், முனியப்பன், ஜனார்த்தனன், சிவகுரு, வீரபத்திரன், திருப்பதி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர், தங்கள் ஆதரவை மாற்றுக் கட்சிகளில் இருந்து திருப்பி, அதிமுகவில் இணைந்தனர்.


இணைபவர்களை தருமபுரி மாவட்ட அதிமுக செயலாளர் மற்றும் முன்னாள் உயர்கல்வி மற்றும் வேளாண்மை துறை அமைச்சர், எம்.எல்.ஏ கே.பி. அன்பழகன், கட்சி துண்டை அணிவித்து அன்போடு வரவேற்றார். இவ்விழாவில் பாலக்கோடு தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் ராஜா, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டு புதிய உறுப்பினர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies