Type Here to Get Search Results !

பாலக்கோடு‌ நகரில் வணிகர் சங்க மாநில மாநாட்டை முன்னிட்டு அனைத்து வணிகர்களும் கடையடைப்பு.


பாலக்கோடு‌, மே.6-

வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மதுராந்தகத்தில் வணிகர் கோரிக்கை பிரகடன மாநாடு  நேற்று நடந்தது. வணிகர் சங்க மாநாட்டை முன்னிட்டு நேற்று  வணிக நிறுவனங்கள் கடைகளுக்கு,  விடுமுறை அறிவித்திருந்தனர். இதனை ஏற்று தருமபுரி மாவட்டம்  பாலக்கோடு மற்றும் அதன் சுற்று வட்டார பதிகளில் உள்ள சிறிய கடைகள் முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை அனைத்து கடைகளுக்கும் விடுமுறை அளித்திருந்தனர்.


தங்களுடை வருமானத்தையும் பொருட்படுத்தாமல்  வணிகர் மாநாட்டிற்காகவும் மற்றும் வணிகர்கள் ஒற்றுமைக்காகவும் தங்கள் ஆதரவுவை  பறைசாற்றும் விதமாக கடைகளை அடைத்து ஆதரவு வழங்கியதற்க்கும்,  வணிகர் கோரிக்கை பிரகடன மாநாட்டில்   வணிகர் சங்க பிரதிநிகள் நிர்வாகிகள் வணிகர் சங்க உறுப்பினர்கள் என திரளானோர் கலந்து கொண்டு மாநாட்டை வெற்றிகரமாக நடத்த ஒத்துழைப்பு வழங்கியதற்கும் அனைத்து வணிகர் சங்கத்தின் சார்பாக எங்கள் உளமார்ந்த நன்றிகளை தெரிவித்து  கொள்வதாக தர்மபுரி மாவட்ட இளைஞர் அணி வணிகர் சங்க மாவட்ட தலைவர் ஆர்.சரவணன் தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies