இந்த ஆண்டு நடைபெற்ற CBSE பொதுத்தேர்வில் பங்கேற்ற மாணவர்கள் பலரும் மாவட்ட மட்டத்தில் சாதனை பெற்றுள்ளனர். பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் டி.கே. தூயா மற்றும் எஸ்.எஸ். கீர்த்தனா ஆகியோர் 492 மதிப்பெண்கள் பெற்று முன்னணியில் உள்ளனர். அவர்களைத் தொடர்ந்து எஸ். சுசிந்தர் மற்றும் ருதுவர்ஷினி 487 மதிப்பெண்கள், மகதி பிரியதர்ஷினி மற்றும் ஆனுவர்ஷினி 485 மதிப்பெண்கள் பெற்று பள்ளியின் பெருமையை உயர்த்தினர்.
அதேபோல் பத்தாம் வகுப்பு தேர்விலும் மாணவர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர். மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவி எ. ஆராதனா, 497 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவருடன் எஸ். யாழினி மற்றும் ஜே. ஆசிபா பர்கானா ஆகியோர் 491 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தில் திகழ்ந்துள்ளனர். மேலும் V.N. தன் பி 494 மதிப்பெண்கள் பெற்று சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளார். இந்தப் பொதுத் தேர்வில் 490 மதிப்பெண்களுக்கு மேல் 14 மாணவர்கள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியின் பின்னணி பள்ளியின் தரமான கற்பித்தலும், மாணவர்களின் உற்சாகமான முயற்சியுமே ஆகும். மாணவர்கள் மட்டும் இல்லாமல், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகமும் இந்தச் சாதனையில் முக்கிய பங்கு வகித்துள்ளனர். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், பள்ளியின் நிர்வாகம் மாணவர்களுக்கு ஊக்கமளிக்க செந்தில் கந்தசாமி அறக்கட்டளை சார்பில் ₹1.5 கோடி மதிப்பிலான கல்வி உதவித்தொகை காசோலைகளை வழங்கியுள்ளது. இந்த நிதி உதவி மாணவர்களுக்கு மேலதிக கல்விக்கான உந்துதலாக அமையும்.
இந்த வெற்றிக்கு பின்னால், பள்ளியின் நிறுவனத் தலைவர் சி. செந்தில் கந்தசாமி, துணைத்தலைவர் திருமதி மணிமேகலை கந்தசாமி, செயலாளர் கே. தனசேகரன், தாளாளர் திருமதி தீப்பி தனசேகர், நிர்வாக அலுவலர் ஜே. கார்த்திகேயன் மற்றும் முதன்மை முதல்வர் சீனிவாசன் ஆகியோர் நேர்த்தியான வழிகாட்டுதலும், தன்னலமற்ற அர்ப்பணிப்பும் இருந்தது.
இந்தச் சாதனை, மாணவ, மாணவியரின் எதிர்காலம் மட்டுமல்ல, மாவட்டத்தின் கல்வித் தரத்தையும் உயர்த்தும் ஒரு முக்கியமான நிகழ்வாகும். இது பிற பள்ளிகளுக்கும் ஒரு ஊக்கமாக அமையும் என்ற நம்பிக்கையுடன், மாணவர்களுக்கு இதேபோன்ற வெற்றிகள் தொடரட்டும் என அனைவரும் வாழ்த்துகிறார்கள்.

