Type Here to Get Search Results !

பாலக்கோடு சர்க்கரை ஆலையில் திருமண மண்டபம் கட்டிடம் — நிதி பற்றாக்குறையால் பணிகள் பாதியில் நிறுத்தம்! விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை!

பாலக்கோடு, ஏப்ரல் 20:
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே திம்மம்பட்டியில் செயல்பட்டு வரும் தர்மபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையில், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் நலன் கருதி 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திருமண மண்டப கட்டுமானப் பணிகள், நிதி இல்லாத காரணத்தால் கடந்த 3 ஆண்டுகளாக பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.

இயற்கை அமைப்புகளுடன் கூடிய இந்த மண்டபம், 1.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது 80% கட்டுமானம் முழுமையடைந்த நிலையில், சுற்றுச்சுவர், சமையல் கூடம், சமையல் பாத்திரங்கள், மின்சாதனங்கள், பர்னிச்சர் உள்ளிட்ட பணிகள் நிலுவையில் உள்ளன. பணியின் தொடர்ச்சிக்குத் தேவையான நிதியின்மை, திட்டம் முழுமையாக நிறைவு பெற முடியாமல் தடுப்பதாக கூறப்படுகிறது.


இதுகுறித்து ஆலையின் நிர்வாக இயக்குநர் வேளா வள்ளி சேகர் தெரிவித்ததாவது:

"கரும்பு விவசாயிகள், தொழிலாளர்கள், பொதுமக்கள் தங்கள் குடும்ப சுப நிகழ்வுகளை குறைந்த கட்டணத்தில் நடத்துவதற்காக இந்த திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இது நன்கு இயங்கத் தொடங்கினால், ஆலையைச் சுற்றியுள்ள மக்களுக்கு மிகுந்த நன்மை கிடைக்கும். அதேசமயம், ஆலையின் வருவாயும் அதிகரிக்கும்."

மேலும் அவர், மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு மன்ற உறுப்பினர்களின் தலையீடில், இந்த திட்டத்திற்கு தேவையான நிதி உதவிகளை வழங்கி, திருமண மண்டபத்தை முழுமையாக முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினார்.


விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பிலும், அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, திட்டம் விரைவில் நிறைவு பெற வேண்டிய தேவை குறித்த கோரிக்கைகள் எடுக்கும் விதமாக அதிகரித்துவருகின்றன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies