சாலை பணிகள் முழுமையாக முடிக்கப்படாத நிலையில் எந்தவித அரசுத் தகவல் வெளியீடும் இல்லாமல் கடந்த இரு மாதங்களாக இந்த சுங்கச்சாவடியில் கட்டண வசூல் நடைபெற்று வருகிறது. தற்போது, ஒரு முறை சுங்கக் கட்டணமாக 4 சக்கர வாகனங்களிடம் ரூ.85 வசூலிக்கப்படுவது மட்டுமின்றி, உள்ளூர்வாசிகளிடமிருந்து மாதத்துக்கு ரூ.340 என வசூலிக்கப்படுவதும் மக்களில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பாலக்கோடு சுற்றுவட்டார மக்கள் தங்களுக்கு சலுகை வழங்கப்படவேண்டும் என்றும், குறைந்தபட்சம் சுங்க வசூல் செய்ய வேண்டாமெனவும் தொடர்ந்து கோரிக்கைகள் விடுத்தும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், தர்மபுரி நோக்கி செல்லும் வாகன ஓட்டிகள் தற்போது ஜிட்டாண்டஅள்ளி வழியாக தடங்கம் வரை சென்று வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் 10 கிலோ மீட்டர் கூடுதலாக பயணிக்க வேண்டி வரும் நிலையில், நெடுஞ்சாலை துறை பாப்பாரப்பட்டி கூட்டு சாலையில் தர்மபுரி பைபாஸ் சாலையை உருவாக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி வருகின்றனர்.
தற்போது சுங்கச்சாவடியிலிருந்து புலிகரை வரை வெறும் 6 கிலோ மீட்டருக்கே தேசிய நெடுஞ்சாலை பயன்படுத்தப்படுவதாகவும், அதற்கே ரூ.85 வசூலிப்பது தாராளமான கட்டண கொள்ளையென வாகன ஓட்டிகள் புலம்புகின்றனர். தினமும் சுங்கச்சாவடி ஊழியர்களுடன் வாகன ஓட்டிகள் வாக்குவாதத்தில் ஈடுபடுவதால், மக்கள் போராட்டம் வெடிக்க வாய்ப்பு இருப்பதாகவும், மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக