தருமபுரி மாவட்டம் பாலக்கோடு நகரில் இயங்கி வரும் உழவர் சந்தையில், திருவண்ணாமலை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நான்காம் ஆண்டு பயிலும் பயிற்சி மாணவிகள் கள ஆய்வில் ஈடுபட்டனர். இந்த களபணியின் மூலம், மாணவிகள் நேரடியாக விவசாயி சந்தை முறைகள், ஒழுங்குமுறை விற்பனை மையங்கள், மற்றும் ஏற்றுமதிக்கான பதப்படுத்தல் செயல்முறைகள் குறித்து பயிற்சி பெற்றனர்.
உழவர் சந்தையில் விற்பனை செய்யப்படும் காய்கறிகள், பழங்கள், மற்றும் சிதைவேளைகளின் தரம், விலை நிர்ணயம், நேரடி விற்பனை மூலம் விவசாயிகளுக்கு கிடைக்கும் நிகர ஆதாயம் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டனர். மேலும், பொதுமக்களுக்கு தரமான காய்கறிகளை குறைந்த விலையில் பெறும் வாய்ப்பு எப்படி உருவாகிறது என்ற கோணத்திலும் அவர்கள் பயிற்சி பெற்றனர்.
இந்த கள ஆய்வில் திருவண்ணாமலை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை சேர்ந்த மாணவிகள் திரளாக பங்கேற்றனர். உண்மை நிலைகளை நேரில் காணும் வாய்ப்பு பெற்ற மாணவிகளுக்கு இது சிறப்பான அனுபவமாக இருந்தது. இந்தக் களபணி, மாணவிகள் எதிர்காலத்தில் விவசாய நுட்பங்களை நடைமுறையில் பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதலாக அமையும் என கல்வி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக