பாலக்கோட்டில் பத்து ரூபாய் இயக்கம் – முதல் மாவட்ட ஆலோசனை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 7 ஏப்ரல், 2025

பாலக்கோட்டில் பத்து ரூபாய் இயக்கம் – முதல் மாவட்ட ஆலோசனை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.


தருமபுரி, ஏப்ரல் 7 –

தருமபுரி மாவட்டத்தில் பத்து ரூபாய் இயக்கத்தின் சார்பில் முதல் மாவட்ட ஆலோசனை கூட்டம் நேற்று (06.04.2025) பாலக்கோட்டில் உள்ள CKM காம்ப்ளெக்ஸில் அமைந்துள்ள இயக்கத்தின் அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.


இந்த ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி. நாகராஜ் தலைமையிலானதாகும். தருமபுரி, நல்லம்பள்ளி, காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு வட்டங்களில் இருந்து 25க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


கூட்டத்தில் ஐந்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், இந்த நிதி ஆண்டில் அரசு அலுவலகங்களில் வெளிப்படை தன்மையை மேம்படுத்தவும், ஊழலை கட்டுப்படுத்தவும், பொதுமக்கள் நலனுக்காக தகவல் பெறும் உரிமை (RTI) சட்டத்தின் கீழ் மனுக்கள் தாக்கல் செய்து, பெறப்பட்ட தகவல்களை சமூக வலைதளங்களில் பகிர்வது முக்கியமாக குறிப்பிடப்பட்டது.


மேலும், மே மாதம் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் கொல்லிமலையில் நடைபெறவுள்ள மாநில பொது குழு கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.


கூட்டத்தின் ஒரு முக்கிய அம்சமாக, புதிய பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் அறிமுகப்படுத்தப்பட்டனர். அடுத்த மாத ஆலோசனை கூட்டம் காரியமங்கலம் வட்டத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.


மேலும், ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒவ்வொரு வட்டத்திலும், சுழற்சி முறையில் ஊராட்சிகளுக்கு இடையே ஆலோசனை கூட்டங்களும், தகவல் பெறும் உரிமை சட்டம் குறித்து பயிற்சி வகுப்புகளும் நடைபெறும் என இயக்கம் தெரிவித்துள்ளது.


இந்த நிகழ்வு, இயக்கத்தின் செயல் திட்டங்களை வலுப்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த ஒன்றாக அமைந்தது.


கருத்துகள் இல்லை:

Post Top Ad