பாலக்கோடு, ஏப்ரல் 29:
அல்ராஜீ கவுண்டர் தெருவைச் சேர்ந்த கவிதா (வயது 50), சிக்கார்த்தனஅள்ளி அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், கருப்பை புற்றுநோய் மற்றும் பக்கவாதம் காரணமாக விருப்ப ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப்பின், அவருக்கு ரூ.29.5 லட்சம் மதிப்பிலான பண பலன்கள் வழங்கப்பட வேண்டிய நிலையில், கல்வித்துறையின் அனுமதி கிடைத்தும், பாலக்கோடு சார்நிலை கருவூல அலுவலகத்தில் அனுமதி வழங்காமல் ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், திருமல்வாடி கிராமத்தைச் சேர்ந்த ராமசந்திரன் (42) என்பவர், பாலக்கோடு சார்நிலை கருவூலத்தில் கூடுதல் சார்நிலை அலுவலராக பணியாற்றி வந்தார். கவிதா அவரிடம் உரிய பணப்பலன்கள் குறித்து கேட்டபோது, ரூ.10,000 லஞ்சம் தரவேண்டும் என வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் மாவட்ட அரசுத்துறை அலுவலகங்களில் லஞ்சம் தொடர்பாக மீண்டும் கவனத்தை திருப்பியுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக