Type Here to Get Search Results !

மாரண்டஅள்ளி சத்திரம் தெருவில் ஸ்ரீ ராம நவமி கொண்டாட்டம் – பாஜகவினர் நீர் மோர், பானகம் வழங்கினர்.

 

தர்மபுரி, ஏப்ரல் 6 –

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி நான்கு ரோடு அருகிலுள்ள சத்திரம் தெருவில், ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு பக்தர்களுக்கு நீர் மோர் மற்றும் பானகம் வழங்கும் நிகழ்ச்சி உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

இந்த விழா நிகழ்ச்சிக்கு பாஜக ஒன்றிய பொதுச்செயலாளர் முருகன் தலைமையினில் ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் குணாஜி மற்றும் முன்னாள் ஒன்றிய தலைவர் கருணாகரன் முன்னிலை வகித்தனர்.

விழா தொடக்கமாக ஸ்ரீ ராமர் படத்திற்கு மலர்மாலை அணிவித்து, கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்யப்பட்டது. பின்னர், புனித நாளை முன்னிட்டு பக்தர்களின் தாகம் தீர நீர் மோர் மற்றும் பானகம் வழங்கப்பட்டது. பாஜக நிர்வாகிகள் சண்முகம், செல்வராஜ், பெரியசாமி, ஸ்ரீதேவி, சிவசங்கரி, ரவி, சிவா, இளங்கோ, மற்றும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி வடிவேல் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 100க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் பக்தி உற்சாகத்துடன் கலந்துகொண்டு ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்தனர்.


இந்நிகழ்ச்சி பக்தர்களிடையே பாராட்டை பெற்றதோடு, சமூக சேவையில் பாஜகவின் பங்களிப்பை வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884