இந்த விழா நிகழ்ச்சிக்கு பாஜக ஒன்றிய பொதுச்செயலாளர் முருகன் தலைமையினில் ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் குணாஜி மற்றும் முன்னாள் ஒன்றிய தலைவர் கருணாகரன் முன்னிலை வகித்தனர்.
விழா தொடக்கமாக ஸ்ரீ ராமர் படத்திற்கு மலர்மாலை அணிவித்து, கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்யப்பட்டது. பின்னர், புனித நாளை முன்னிட்டு பக்தர்களின் தாகம் தீர நீர் மோர் மற்றும் பானகம் வழங்கப்பட்டது. பாஜக நிர்வாகிகள் சண்முகம், செல்வராஜ், பெரியசாமி, ஸ்ரீதேவி, சிவசங்கரி, ரவி, சிவா, இளங்கோ, மற்றும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி வடிவேல் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 100க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் பக்தி உற்சாகத்துடன் கலந்துகொண்டு ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்தனர்.
இந்நிகழ்ச்சி பக்தர்களிடையே பாராட்டை பெற்றதோடு, சமூக சேவையில் பாஜகவின் பங்களிப்பை வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக