பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவு ஆட்களை ஏற்றிசெல்லும் மினிலாரி, ஆட்டோக்கள்- அதிகாரிகள் திணறல். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 6 ஏப்ரல், 2025

பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவு ஆட்களை ஏற்றிசெல்லும் மினிலாரி, ஆட்டோக்கள்- அதிகாரிகள் திணறல்.


பாலக்கோடு,ஏப்.7-

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, காரிமங்கலம், மாரண்டஹள்ளி ஆகிய பகுதிகளிலிருந்து மினிலாரி, டாடாஏசி, பிக்கப், ஆட்டோக்களில் அதிக அளவு ஆட்களை ஆபத்தான முறையில் ஏற்றி செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது.


மேலும் தமிழக அரசு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை ஆட்டோகளுக்கும், சரக்குவாகன ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தி இருந்தும் ஆட்டோக்களில் சுமார் 15 நபர்கள் ஏற்றிச் செல்லுகின்றனர்.  மினிசரக்கு வாகனங்களில்  தக்காளி ,காய்கறி, சிமெண்ட், பூசா மூட்டை, குடிநீர் குழாய் உள்ளிட்டவை ஏற்றுவதற்கு பதிலாக  அதிக அளவு ஆட்களை ஏற்றி செல்லுகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 


ஆட்டோக்களை  செல்போன் பேசிக்கொண்டே ஒரு கையில் பிடித்து கொண்டு இயக்குவது, அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹரன்களை பயன்படுத்துவது, சீருடை இல்லாமல் ஆட்டோக்கள் இயக்குவதும் தொடர்கதையாக உள்ளது. மேலும் இதுபோன்ற விதி மீறல்களில் ஈடுபட்டு வரும் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் வட்டார மோட்டார் வாகன அலுவலர், போக்குவரத்து காவல்துறைனர் மெத்தன போக்கு கடைப்பிடித்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.


எனவே விதிமுறைகளை பின்பற்றாத சரக்கு வாகனங்கள், ஆட்டோ ஓட்டுநர் மீது மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad