தமிழ்நாட்டை விளையாட்டு முன்னோடியாக மாற்றும் முயற்சியில், அனைத்து மாவட்டங்களிலும் "STAR (Sports Talent Advancement & Recognition)" என்ற உயர்தர விளையாட்டு திறன் மேம்பாட்டு மற்றும் அங்கீகார மையம் உருவாக்கப்பட உள்ளது.
இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் SDAT-ஸ்டார் இறகுபந்து அகாடமிக்கு வீரர், வீராங்கனைகள் தேர்வு வரும் 28.04.2025 காலை 8.00 மணி அளவில் மாவட்ட விளையாட்டு அரங்கம், தருமபுரியில் நடைபெற உள்ளது.
வயது வரம்பு: 12 முதல் 21 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.
பதிவு செய்திகளாக: பள்ளித்தலைமையாசிரியரிடமிருந்து பெறப்பட்ட படிப்பு சான்றிதழ் மற்றும் ஆதார் நகல் கட்டாயம் கொண்டு வரவேண்டும்.
தேர்வில் தேர்ந்தெடுக்கப்படும் 20 வீரர் மற்றும் 20 வீராங்கனைகளுக்கு:
-
காலை நேர உணவாக முட்டை, லெமன் ஜூஸ்
-
மாலையில் சுண்டல், பால், பழங்கள் வழங்கப்படும்(நபர் ஒன்றுக்கு ரூ.25 மதிப்பில் நாள் ஒன்றுக்கு)
இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் கூறியதாவது: “விளையாட்டு வீரர்களின் திறனை மேலெழுப்ப, மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியில் பயிற்சி, அங்கீகாரம், ஊக்குவிப்பு வழங்கும் வகையில் இந்த மையங்கள் தொடங்கப்படுகின்றன. இவ்வாய்ப்பை மாவட்டத்திலுள்ள இளைஞர்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக