தருமபுரி மாவட்டம் தொப்பூர் சுங்கச்சாவடி அருகே, மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித்திரிந்த, வயது சுமார் 55 மதிக்கத்தக்க ஒருவரை, கடந்த மாதம் சாலை கடக்கும்போது லாரி மோதி காயமடைந்த நிலையில் காவல்துறையினர் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
உறவினர் தொடர்பான எந்தவிதமான தகவலும் இல்லாத நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்நிலையில், தொப்பூர் காவலர் ராஜேந்திரன் தலைமையில், மை தருமபுரி அமைப்பின் நிறுவனர் சதீஸ் குமார் ராஜா, செயலாளர் தமிழ்செல்வன், அமரர் சேவை குழுவினர் செந்தில், ஜெய் சூர்யா மற்றும் மருத்துவர் ஸ்ரீகாந்த் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தி அவரது உடலை மதிப்புடன் நல்லடக்கம் செய்தனர்.
இது மை தருமபுரி அமரர் சேவையின் 141ஆவது சேவை என கூறப்படுகிறது. ஆதரவற்றோருக்கும், ஏழ்மை காரணமாக இறந்தவர்களுக்கும் உறவாய் நிற்பதே தங்களின் சேவைக் கடமை என மை தருமபுரி அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக