தருமபுரி, ஏப்.29 –
தொப்பூர் கிராமத்தை சேர்ந்த சகோதரர்கள் அருள்மணி மற்றும் சிதம்பரம் ஆகியோர் சந்தநூரான்கொட்டாய் கிராமத்தில் இருந்து ஒரு ஆட்டை திருடிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் செல்லும் போது, ஊர் பொதுமக்கள் விரட்டி சென்று அவர்களை பிடித்து தாக்கியதாக முகநூலில் செய்திகள் வெளியானது.
இது தொடர்பாக தகவல் கிடைத்ததும், தொப்பூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரையும் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அருள்மணி அளித்த புகாரின் அடிப்படையில் பொதுமக்கள் மீது தொப்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ஆடு திருட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் இருவரிடமிருந்து, ஆடு உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையிலும் தனித் தகையிலான வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரு வழக்குகளும் தொடர்பாக காவல்துறையினர் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக