Type Here to Get Search Results !

அரூரில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள்: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.


அரூர், ஏப்.29 –

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 135ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு, திராவிடர் கழக மாவட்ட தலைவர் அ. தமிழ்ச்செல்வன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமன், திமுக மாநில ஆதிதிராவிடர் நலக் குழு துணைச் செயலாளர் சா. ராஜேந்திரன், கவிஞர் கண்ணிமை, பகுத்தறிவாளர் கழக மாநில கலைத்துறை செயலாளர் மாரி. கருணாநிதி, மாவட்ட மகளிர் அணி தலைவர் மணிமேகலை, பாசறை தலைவர் கல்பனா, ஆசிரியர்கள் அசோகன், சின்னக்கண்ணன், கவிஞர் குறிஞ்சி சீதாராமன், பேரூராட்சி துணைத் தலைவர் சூரிய தனபால், திமுக நகர கழக செயலாளர் முல்லை இரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிலைக்கு மாலை அணிவித்தனர்.


மாலை அணிவிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் நூல்களை திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமன் வழங்கி வாழ்த்துரை நிகழ்த்தினார். திமுகவினர் விண்ணரசு, பாடகர் மணி, கவுன்சிலர் உமா, முருகன் மற்றும் திராவிடர் கழகத் தலைமையினரான வழக்கறிஞர் வடிவேலன், ஒன்றிய தலைவர் குமரேசன், செயலாளர் பச்சையப்பன், மாணவர் அணி பிரதாப், கவிஞர் நொச்சி பூந்தளிரன், பிரேம் குமார், ராம்கி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். வருகை தந்த அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies