Type Here to Get Search Results !

வக்ஃப் திருத்தச் சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி நல்லம்பள்ளியில் மனிதநேய ஜனநாயகக் கட்சி பிரச்சாரம்.


நல்லம்பள்ளி, ஏப்ரல் 19:-

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் அமைந்துள்ள மஸ்ஜித் யூசுப் பள்ளிவாசலில், வக்ஃப் திருத்தச் சட்டத்தை எதிர்த்து மனிதநேய ஜனநாயகக் கட்சி சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் திருத்தச் சட்டம் குறித்து விழிப்புணர்வு துண்டறிக்கைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. இந்த பிரச்சாரத்தை மாவட்டச் செயலாளர் எம். இம்ரான் தலைமையில் மனிதநேய ஜனநாயகக் கட்சி நடத்தியது.


வக்ஃப் மசோதாவை நிறைவேற்றிய ஒன்றிய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. வக்ஃப் சட்ட திருத்தத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள் அபீஸ், குதரத், பயாஸ், உமர் மற்றும் பலர் பங்கேற்றனர்.


2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த வக்ஃப் (திருத்த) சட்டம், இந்தியாவில் வக்ஃப் சொத்துகளின் நிர்வாகத்தில் முக்கிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்தின் முக்கிய அம்சங்களில், வக்ஃப் வாரியங்களில் முஸ்லிமல்லாத உறுப்பினர்களை நியமிப்பது, மற்றும் வக்ஃப் சொத்துகளின் உரிமையை உறுதிப்படுத்த புதிய விதிகளை அறிமுகப்படுத்துவது அடங்கும்.


இந்த சட்டம், முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை பாதிக்கும் என பலர் விமர்சனம் செய்துள்ளனர். குறிப்பாக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மசூதிகள் மற்றும் பிற மத சொத்துகள், உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால், அரசால் கைப்பற்றப்படும் அபாயம் இருப்பதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies