Type Here to Get Search Results !

பங்குனி தேரடி பூஜையை முன்னிட்டு பாலக்கோட்டில் திரெளபதி அம்மன் திருவீதி உலா.



தர்மபுரி, ஏப்ரல் 7 –

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தர்மராஜா மற்றும் திரெளபதி அம்மன் கோயிலில் பங்குனி மாத தேரடி பூஜையை முன்னிட்டு, திரெளபதி அம்மன் திருவீதி உலா பக்தி பூர்வமாக நடைபெற்றது. அதிகாலை வேளையில் அம்மனுக்கு பால், இளநீர், தேன், சந்தனம், குங்குமம் ஆகியவைகளால் சிறப்பான அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதன்பின், புஷ்ப அலங்காரத்துடன் மகாதீபாராதனை காணும்படி பக்தர்கள் திரளாக திரண்டனர்.

இரவு நேரத்தில் வாணவேடிக்கைகளுடன், மேளதாள இசையின் முழக்கத்தில் திரெளபதி அம்மன் திருவீதி உலா பம்பைமாக நடைப்பெற்றது. கோயில் வளாகத்திலிருந்து தொடங்கிய உலா, கடை வீதி, பஸ் ஸ்டாண்ட், காவல் நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது.


விழாவிற்காக கோயில் விழா குழுவினர், அர்ஜுனன் கவுண்டர் மற்றும் அண்ணாமலை கவுண்டர் குடும்பத்தினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். திரளான பக்தர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு அம்மனை தரிசித்து நன்னாளை வேண்டிக் கொண்டனர். விழாவின் சிறப்பாக, அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884